அச்சுறுத்தலான சூழ்நிலைக்கு மத்தியலும் அதனை கருத்தில் கொள்ளாது பொது மக்கள் தொடர்ந்தும் கவனயீனமாக செயற்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் ஜயருவாண் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
எழுமாறாக மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளிலும் கூட கொழும்பு நகரில் 5 வீதமான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள 5 நட்சத்திர விருந்தகம் ஒன்றில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தமது விருந்தகத்தின் உடற்பிடிப்பு பிரிவில் பணியாற்றிய ஒருவருக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த விருந்தகத்தின் முகாமைத்துவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த உடற்பிடிப்பு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ருவென்வெல்லை சுகாதார மருத்துவ அதிகாரி பகுதிக்குட்பட்ட கரவனெல்லை வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
அவர் ருவன்வெல்லை – முதுகம – வராவல பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக